Pages

Friday, February 4, 2011

பிரிவு


பெயர் என்ன .. ஊர் என்ன என்று ஆரம்பித்த கேள்விகள் ...நீண்டன ..
நட்பு வட்டத்தை பெரிதாகிக் கொண்ட பேரின்பம்
இரவெல்லாம் கண்விழித்து பேசிய தருணம்
இரு நாள் விடுமுறையில் பல தடவை பேச நினைத்த மனம்
திருமணத்திற்கு என்ன பரிசு வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு கொண்ட நட்பு
உன்னவனை காண கல்லூரி முழுதும் நடந்த நினைவுகள்
என்றும் உன் தோழியாக இருப்பேன் என்று எடுத்த உறுதி மொழிகள்
எல்லாம் நினைவோடு இருந்தபோதும்
நீ இல்லையே இவ்வுலகில்...

யார் ?

யார் யாரோ ஏன் நடப்பை நிராகரித்த போதும்
நான் கலங்கி விடவில்லை
நான் நின்றுவிட்டேன் நீ என்னை ... யார் ? ?
என்று கேட்ட பொது ....
பதில் கூற விரும்பவில்லை ...
என் நினைவுகள் பதிலாகுமென்று .....